மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மீன்வளத் துறையானது, ஐதராபாத்தில் மீன்வளம் சார்ந்தப் புத்தொழில் மாநாடு 2.0 நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வு ஆனது, மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறைகளில் தொழில்முனைவு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் நிலைத் தன்மையை மேம்படுத்துவதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்த மாநாட்டின் போது, NFDP கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
இது பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்ரிதி சஹ்-யோஜனா (PM-MKSSY) எனும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
இந்தச் செயலியானது மிகவும் குறிப்பாக மீன்வளத் துறையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நன்குப் பயனளிக்கும் வகையில் அவர்கள் அரசாங்கத் திட்டங்களை அணுகுவதை எளிதாக்குவதற்காக என வடிவமைக்கப் பட்டு உள்ளது.