TNPSC Thervupettagam

முக்கிய மந்திரி காரிகர் சஹயாதா

March 8 , 2019 1962 days 524 0
  • கைவினைக் கலைஞர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக “முக்கிய மந்திரி காரிகர் சஹயாதா” என்ற புதிய திட்டத்தை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தொடங்கியுள்ளார்.
  • கைவினைக் கலைஞர்கள் இயக்குனரகமானது இத்திட்டத்தைச் செயல்படுத்தும் தலைமைத் துறையாகும்.
  • 10 ஆண்டு அனுபவம் உள்ள கைவினைக் கலைஞர்கள் மற்றும் ஆண்டு வருமானம் 1 இலட்சத்திற்குக் கீழ் உள்ளவர்கள் ஆகியோர் ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையான ரூ.800 ரூபாயைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • மேலே குறிப்பிட்ட, அதே அனுபவம் மற்றும் அதே ஆண்டு வருமானம் உள்ள 80 வயதிற்குக் மேலே உள்ள கைவினைக் கலைஞர்கள் உதவித் தொகையான ரூ.1000 ரூபாயைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு தேர்வுக் குழுவானது மாவட்ட அளவில் அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியாளரின் கீழ் அமைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்