கைவினைக் கலைஞர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக “முக்கிய மந்திரி காரிகர் சஹயாதா” என்ற புதிய திட்டத்தை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தொடங்கியுள்ளார்.
கைவினைக் கலைஞர்கள் இயக்குனரகமானது இத்திட்டத்தைச் செயல்படுத்தும் தலைமைத் துறையாகும்.
10 ஆண்டு அனுபவம் உள்ள கைவினைக் கலைஞர்கள் மற்றும் ஆண்டு வருமானம் 1 இலட்சத்திற்குக் கீழ் உள்ளவர்கள் ஆகியோர் ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையான ரூ.800 ரூபாயைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
மேலே குறிப்பிட்ட, அதே அனுபவம் மற்றும் அதே ஆண்டு வருமானம் உள்ள 80 வயதிற்குக் மேலே உள்ள கைவினைக் கலைஞர்கள் உதவித் தொகையான ரூ.1000 ரூபாயைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு தேர்வுக் குழுவானது மாவட்ட அளவில் அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியாளரின் கீழ் அமைக்கப்படும்.