மத்திய அரசு, கேரள அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை இணைந்து “முதலாவது வலிமையான கேரளா” என்ற திட்டத்திற்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இது இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் தாக்கங்களுக்கு எதிராக வலிமையான கேரளாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பசுமையான மற்றும் வலிமையான கேரளாவைக் கட்டமைக்கும் நோக்கம் கொண்ட “மீள்கட்டமைப்பு கேரள வளர்ச்சித் திட்டம்” என்ற கேரளாவின் திட்டத்திற்கு ஆதரவளிக்க எண்ணும் மத்திய அரசின் ஆதரவின் ஒரு பகுதியாகும்.