மைசூரில் பிறந்தவரான கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தின் 11-வது தலைமைப் பொருளாதார வல்லுநராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால் IMF-ன் தலைமைப் பொறுப்பில் பொறுப்பேற்றுள்ள முதல் பெண்ணாக அவர் ஆகியுள்ளார்.
இவர் 2018 டிசம்பர் 31 அன்று பதவி ஓய்வு பெற்ற மௌரிஸ் அப்ஸ்பெல்ட் (மௌரி) என்பவருக்குப் பதிலாக பதவியேற்றுள்ளார்.
மேலும் இந்த தலைமைப் பொருளாதார வல்லுநர் நிதி ஆய்வுத் துறையின் இயக்குநராகவும் இருப்பார்.