TNPSC Thervupettagam

முதல் இந்திய நடுவர் – டோக்கியோ ஒலிம்பிக்ஸ்

July 15 , 2021 1102 days 563 0
  • பவன் சிங் 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கான நடுவராக (juror) நியமிக்கப்பட்ட  முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
  • இவர் இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் (ரைஃபில்) போட்டிக் கழகத்தின் இணைத் தலைமைச் செயலாளர் ஆவார்.
  • இவர் சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டி குழுவினுடைய உலகக் கோப்பைப் போட்டியின் மேலாளராக இருந்தார்.
  • நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 போட்டியில் 26 நடுவர்கள் அடங்கிய ஒரு குழுவானது இந்தப் போட்டிகளை மேற்பார்வையிடும்.
  • இதில் 6 நபர்கள் ஜப்பானையும் மற்றவர்கள் இதர நாடுகளையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்