TNPSC Thervupettagam

முதல் இயந்திர யானை

February 9 , 2024 161 days 359 0
  • Voices for Asian Elephants எனப்படும் (ஆசிய யானைகளுக்கான முன்னெடுப்புகள்) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமானது ஊட்டியின் கூடலூரில் உள்ள தேவர்சோலையில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்கு இயந்திர யானை ஒன்றினை வழங்கியுள்ளது.
  • கோவில்களில் யானைகளானவை சுகாதாரமற்ற முறையிலும், மனிதாபிமானமற்ற முறையிலும் பராமரிக்கப் படுவது குறித்து அடிக்கடி வெளியாகும் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இந்த இயந்திர யானைகள் ஏற்கனவே கேரளா முழுவதும் உள்ள கோயில்களுக்கு நன்கொடையாக வழங்கப் பட்டுள்ளன.
  • தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வழங்கப்படும் முதல் இயந்திர "யானை" இது ஆகும்.
  • கேரளாவில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் தனியாரால் பராமரிக்கப்பட்ட 25 யானைகள் இறந்துள்ளன என்பதோடு, 2024 ஆம் ஆண்டில் ஏற்கனவே மூன்று யானைகள் இறந்து உள்ளன.
  • யானைகளை அடைத்து வைத்து துன்புறுத்தாமல், அதே சமயம் நாட்டின் கலாச்சாரம் இன்றும் பேணப் படுவதை இந்த இயந்திர யானைகள் உறுதி செய்ய உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்