TNPSC Thervupettagam

முதல் உலகளாவிய நீர் ஆய்வு செயற்கைக்கோள்

December 28 , 2022 572 days 378 0
  • நாசா அமைப்பானது ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் மூலம் ‘மேற்பரப்பு நீர் மற்றும் கடல் நிலப்பரப்பு‘ (Surface Water and Ocean Topography - SWOT) என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது.
  • இந்தச் செயற்கைக்கோள் விண்வெளியில் இருந்து பூமியின் நன்னீர் அமைப்புகளின் முதல் உலகளாவிய ஆய்வை எடுக்கும்.
  • SWOT என்பது விஞ்ஞானிகளுக்குக் கடல்கள் மற்றும் காலநிலை மாற்றம் அதனை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய ஒரு ஆழமான புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு மேம்படுத்தப் பட்ட ரேடார் செயற்கைக்கோள் ஆகும்.
  • இந்த செயற்கைக்கோள் கடல் நீர்மட்ட அம்சங்களை தற்போது சாத்தியமுள்ளதை விட பத்து மடங்கு துல்லியமாக அளவிட முடியும்.
  • இதனால் பூமியில் உள்ள ஒரு மில்லியன் ஏரிகள் மற்றும் ஆறுகளை அளவிட முடியும்.
  • இந்த செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலமாக வெள்ள முன்னறிவிப்புகளின் துல்லியத்தை மேம்படுத்தவும் முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்