இந்தியாவின் மற்றும் ஆசியாவின் முதலாவது தேசிய ஓங்கில் ஆராய்ச்சி மையமானது பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் கங்கைக் கரையில் அமைய இருக்கின்றது.
ஓங்கில் என்பது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 என்ற சட்டத்தின் அட்டவணை I என்பதின் கீழ் மிகவும் அருகி வரும் ஒரு உயிரினமாக பட்டியலிடப் பட்டுள்ளது.
இது 2009 ஆம் ஆண்டில் தேசிய நீர்வாழ் விலங்கு என்று அறிவிக்கப்பட்டது.
உலகில் உள்ள நான்கு நன்னீர் டால்பின்களில் கங்கை டால்பின் இனமும் ஒன்றாகும்.
மற்ற மூன்று இனங்கள் பின்வருவனவற்றில் காணப்படுகின்றன
யாங்சே நதி,
சிந்து நதி மற்றும்
அமேசான் நதி.
கங்கையில் டால்பின்கள் வசிப்பது ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பின் அடையாளத்தைக் காட்டுகின்றது, ஏனெனில் டால்பின்கள் குறைந்தது 5 அடி முதல் 8 அடி வரையுள்ள ஆழமான நீரில் வாழ்கின்றன.