ஸ்பானிய நாட்டில் 5,300 வருடங்கள் பழமையான மண்டை ஓட்டினைத் தொல்லியல் ஆய்வாளர் குழு ஒன்று கண்டறிந்துள்ளது.
அது முதல் காது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதற்கான ஒரு சான்றாக கருதப் படுகிறது.
“அறிவியல் அறிக்கைகள்” என்ற ஒரு இதழில் வெளியான ஒரு கட்டுரையில், இந்தச் சான்றானது மாஸ்டோயிடெக்டோமி (mastoidectomy) என்ற முறையினைக் குறிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மாஸ்டோயிடெக்டோமி என்பது இடைச் செவியழற்சி மற்றும் மாஸ்டோய்டிடிஸ் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த முந்தையக்கால மனிதனின்வலியைப் போக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு அறுவைச் சிகிச்சையாகும்.