பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் சமூகத்தின் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகையைப் பெற ஒருவர் “முதல் பட்டதாரி’ ஆக இருக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையானது “முதல் தலைமுறைப் பட்டதாரி” எனத் திருத்தப்பட உள்ளது.
இதைச் செயல்படுத்துவதன் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற இயலும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத் துறை அமைச்சர் S.S. சிவசங்கர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
“செம்மொழி நூலகம்” நிறுவப்படும் எனவும் அவர் அறிவித்தார்.