அமூர் வல்லூறுகளுக்காக வேண்டி முதல் பறவை கணக்கெடுப்பு ஆவணமாக்கல் என்ற நடவடிக்கையை நாகாலாந்து மேற்கொள்ள உள்ளது.
நான்கு நாட்கள் அளவிலான இந்த டோகு எமோங் பறவை கணக்கெடுப்பானது லோதாஸ் குழுவினரின் அறுவடைக்குப் பிந்தைய டோகு எமோங் திருவிழாவுடன் ஒன்றி வருகிறது.
நாகாலாந்து மாநிலமானது பல்வேறு திருவிழாக்கள் மற்றும் பல்வேறு பறவைகள் கொண்ட மாநிலமாகும்.
பறவைகளுடன் திருவிழாவைக் கொண்டாட அந்தச் சமூகம் ஊக்குவிக்கப்படும் பல முயற்சிகளில் முதன்மையானது டோகு எமோங் பறவை கணக்கெடுப்பாகும்.
இந்தக் கணக்கெடுப்பானது, வோகா வனப் பிரிவு, நாகாலாந்து வன மேலாண்மைத் திட்டத்தின் (NFMP) பிரிவு மேலாண்மை அலகு மற்றும் இந்தியப் பறவைகள் கணக்கெடுப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்பு கொண்ட ஒரு முன்னெடுப்பாகும்.