கிராமப்புற மேம்பாட்டிற்கான சிறந்தப் பங்களிப்பிற்காக என்று செத்ரிசெம் சங்க்தம் என்பவருக்கு முதல் ரோகிணி நய்யார் பரிசு வழங்கப்பட்டது.
கிழக்கு நாகாலாந்தில் உள்ள 1,200 விளிம்பு நிலை விவசாயிகளின் வருமானத்தை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு வேண்டி அவர் தனது ‘Better Life Foundation’ என்ற அறக்கட்டளை மூலம் உதவிகளை வழங்கினார்.
40 வயது அல்லது அதற்கு குறைவான வயதுடைய ஒருவருக்கு இந்தப் பரிசு வழங்கப் படுகிறது.
இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்குப் பங்களிக்கும் வகையில் அமைக்கப்பட்ட சமூக மற்றும் பொருளாதார நோக்கத்திற்கான அமைப்புகளுக்கு நய்யார் அறக்கட்டளையினால் ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுகிறது.