அனைத்து வான்வழிப் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் ஹெலி மையமானது அரியானாவின் குருகிராம் நகரில் அமைக்கப்பட உள்ளது.
ஹெலிகாப்டர்களுக்கென அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் கொண்டுச் செயல்பட உள்ள நாட்டின் முதல் மையமாக இது திகழும்.
ஹெலிபோர்ட் (உலங்கு ஊர்தி தரையிறங்கி ஏறும் இடம்) பணிமனை, வான்வழி வாடகை வாகனங்களின் பராமரிப்பு மற்றும் தனிநபர் பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான விமான வசதியும் இங்கு கிடைக்கப் பெறும்.