ஐஎன்எஸ் சஹ்யாத்ரி கப்பல் ஆனது முதலாவது முத்தரப்பு கடல்சார் கூட்டாண்மை பயிற்சியில் பங்கேற்றது.
இந்தியா-இந்தோனேசியா-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடையிலான முதலாவது முத்தரப்பு கடல்சார் பயிற்சி இதுவாகும்.
இந்த முத்தரப்புப் பயிற்சியானது, இந்நாடுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நிலையான, அமைதியான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைக் கட்டமைப்பதனை ஆதரிப்பதற்கான அவற்றின் கூட்டுத் திறனை மேம்படுத்தச் செய்வதற்குமான வாய்ப்பினை அளித்தது.
ஐஎன்எஸ் சஹ்யாத்ரி கப்பலானது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப் பட்ட திட்டம்-17 வகுப்பு பல்பயன்பாட்டு ரேடாரில் புலப்படாதப் போர்க் கப்பல்களின் வரிசையில் மூன்றாவது கப்பல் ஆகும்.