TNPSC Thervupettagam

முன்கூட்டியே வார்த்தெடுக்கப்பட்ட அமைப்பைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட வீடுகள்

May 30 , 2022 784 days 382 0
  • சென்னை பெரும்பாக்கத்தில் முன்கூட்டியே வார்த்தெடுக்கப்பட்ட அமைப்பைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட 1,152 வீடுகளைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • முன்கூட்டியே வார்த்தெடுக்கப்பட்ட அமைப்பில், தூண்கள், தூண் தாங்கிகள், அடுக்குகள் போன்ற கட்டமைப்புகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, பிறகு கட்டுமான இடத்திற்கு அவை கொண்டு வரப்படுகின்றன.
  • பெரும்பாக்கம் திட்டமானது, உலக வீட்டு வசதித் தொழில்நுட்பச் சவாலின் கீழான லைட் ஹவுஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • தமிழகத்தின் பெரும்பாக்கம் திட்டம் உட்பட மொத்தம் ஆறு லைட் ஹவுஸ் திட்டங்கள் உள்ளன.
  • மற்ற ஐந்து திட்டங்களும் குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
  • ஆறு திட்டங்களுள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பெரும்பாக்கம் திட்டத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்