TNPSC Thervupettagam

முன்னாள் அமைச்சர் அஸ்வனி குமாருக்கு ஜப்பான் விருது

July 30 , 2017 2545 days 908 0
  • ஜப்பான்-இந்தியா உறவுகளை வளர்ப்பதில் பெரும்பங்காற்றிய முன்னாள் அமைச்சர் அஸ்வனி குமாருக்கு கௌரவமிக்க 'ஆர்டர் ஆஃப் திரைசிங் சன்' (Order of the Rising Sun) என்றவிருது வழங்கப்பட்டது.
  • விருதின் பிரிவு : Grand Cordon of the Order of the Rising Sun
  • ‘ஆர்டர் ரைசிங் சன்’ விருதுகளின் மிக உயரிய பிரிவு ‘கிராண்ட் கோர்டன்’ என்பது குறிப்பிடத்தக்கது . இதற்கு முன் இந்த விருதை இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாட்டாபெற்றுள்ளார்.
  • 2013 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் பேரரசரும் பேரரசியும் இந்தியா வந்திருந்தபொழுது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்பு தூதராக அஸ்வனி குமார் பணியாற்றினார். அவர்களின் அரசுமுறை பயணம் வெற்றியடைய குமார் கணிசமான பங்காற்றினார் . மேலும் 2007ல் ஜப்பான்பிரதமர் ஷின்ஜோ அபேயின் அரசுமுறை இந்தியப் பயணத்தின்பொழுது, அஸ்வனி குமார் அவருக்கு உடன்செல்லும்  அமைச்சராகப் (Accompanying Minister )  பணியாற்றினார்.
  • இந்திய வணிக மற்றும் தொழிலகக் கழகங்கள் கூட்டமைப்பின் (FICCI) பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களம் (இந்திய – ஜப்பான்), 2005 ஆம் ஆண்டு அப்போதைய ஜப்பான் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமி வருகையின் போது நிறுவப்பட்டது . இதன் தலைவராக அஸ்வனி குமார் பணியாற்றியுள்ளார்.ஜப்பானின் STS குழுமத்தின் உறுப்பினராக இருந்தபோது,  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஜப்பான்-இந்திய உறவுகளை மேம்படுத்துவதில் குமார் பெரிய பங்களித்திருக்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்