ஜஸ்வந்த் சிங் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் (1998), பாதுகாப்புத் துறை அமைச்சர் (2001) மற்றும் நிதி அமைச்சர் (2002) ஆகிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.
நாட்டில் மிக நீண்ட காலமாக பணியாற்றிய பாராளுமன்றவாதிகளில் இவரும் ஒருவராவார்.
இவர் 2012 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.
1998 ஆம் இந்திய அணு ஆயுதச் சோதனைக்குப் பின்பு தடைபட்டிருந்த அமெரிக்காவுடனான உறவுகளை மிகச் சிறப்பாகக் கையாண்டதற்காக மிகப்பெரிய அளவில் இவர் அறியப்படுகின்றார்.