TNPSC Thervupettagam

முன்னெச்சரிக்கைகளுக்கான நிர்வாக செயல் திட்டம்

November 17 , 2022 612 days 272 0
  • அனைவருக்கும் முன்னெச்சரிக்கைகளுக்கான ஒரு நிர்வாகச் செயல் திட்டமானது வெளியிடப் பட்டது.
  • பருவநிலை மாற்றத்தின் காரணமாக தீவிரமடைந்துள்ள தீவிர வானிலை நிகழ்வுகளுக்கான உலகளாவிய முன்னெச்சரிக்கை அமைப்பை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அனைவருக்கும் முன்னெச்சரிக்கை அமைப்புகளை வழங்கச் செய்வதற்காக சுமார் 3.1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய வேண்டும் என்று இந்தத் திட்டம் முன் மொழிகிறது.
  • உலக மக்கள் தொகையில் 33 சதவீதத்தினருக்கு முன்னெச்சரிக்கை அமைப்புகள் இன்னும் அணுகப் படும் வகையில் கிடைக்கப் பெறவில்லை.
  • ஆப்பிரிக்காவில் உள்ள 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இந்த அமைப்புகளை அணுகுவதற்கான வாய்ப்பினைப் பெறவில்லை.
  • நேரவிருக்கும் பேரிடர் நிகழ்வினை 24 மணிநேரத்திற்கு முன்பாக அறிவிப்பதால், அவற்றினால் ஏற்படும் சேதத்தை 30 சதவிகிதம் குறைக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்