இந்த மசோதா கர்நாடக அரசு வேலைகளில் கன்னட மொழியினருக்கு முன்னுரிமை அளிப்பதோடு அம்மாநிலத்தில் உருவாக்கப்படும் தனியார் வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவும் செய்கிறது.
கன்னட மொழியினைப் படிக்கவும் எழுதவும் தெரிந்த, குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் கர்நாடகாவில் வசிக்கும் பெற்றோர்களைக் கொண்ட தனிநபர்களை இந்த மசோதா கன்னட மொழியினர் என வரையறுக்கிறது.
இந்த மசோதாவின் கீழ், உயர்தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறைக் கல்வி போன்ற படிப்புகளில் கன்னட மொழியின் நடைமுறை மற்றும் செயல்பாட்டு அறிவு கற்பிக்கப் படும்.
அங்கு கன்னட மொழியினை முதன்மையாகக் கொண்டுள்ளப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
அங்கு குறைந்தபட்ச அளவு கூட கன்னட மொழியினரைப் பணியமர்த்தாத தனியார் நிறுவனங்களுக்கு நிலச்சலுகை, வரிச்சலுகை மற்றும் பிற சலுகைகள் போன்றவை மறுக்கப்படும் என இந்த மசோதா கூறுகிறது.
கன்னட மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அம்மாநிலத்தில் அரசு வேலைகள் வழங்கப் படும்.