TNPSC Thervupettagam

மூளை இறப்பை உறுதி செய்ய நெறிமுறை

April 10 , 2018 2292 days 766 0
  • மாநிலத்தில் உறுப்பு மாற்றத்தை (organ transplants) மேலும் வெளிப்படைத் தன்மையுடையதாய்  மாற்றுவதற்கான நோக்கத்தோடு மூளை இறப்பு (Brain death) மருத்துவ வழக்குகளை தீர்மானிப்பதற்காக ஓர் நிலையான இயக்க நடைமுறையை (standard operating procedure-SOP) ஏற்றுக் கொண்டுள்ள நாட்டின் முதல் மாநிலமாக கேரளா உருவாகியுள்ளது.
  • இந்த நிலையான இயக்க நடைமுறை வழிகாட்டுதல்களின் படி, மூளை இறப்பு வழக்குகளை தீர்மானிப்பதில் மூன்று நிலை மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
    • மூளை இறப்பை தீர்மானிப்பதற்கு பரிசோதனைகளுக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை (precautions) மேற்கொள்ள வேண்டும்.
    • மூளையினுடைய பதிலெதிர்ப்பு செயல்பாடுகளின் பகுப்பாய்வு.
    • அப்னியா சோதனை (Apnea Test)- மூளை இறப்பு மதிப்பீட்டின் முக்கிய கூறு.
  • இந்த நெறிமுறைகளின் படி குறைந்தபட்சம் ஒரு அரசு மருத்துவர் உள்ளடங்கிய 4 மருத்துவர்கள் கொண்ட குழுவிற்கு ஓர் நோயாளியை மூளை இறப்பெய்தியவராக அறிவிக்க அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நெறிமுறைகளானது மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என இருவகை மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்