உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச மூளைக்காய்ச்சல் அமைப்பு ஆகியவை ஒரு உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாக நிலவும் மூளைக்காய்ச்சல் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
தொற்று மற்றும் தன்னுடல் தாக்க நோய்க் காரணிகளால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் ஆனது, வயது, பாலினம் அல்லது இனம் ஆகிய எதனையும் பொருட்படுத்தாமல் அது எவரையும் பாதிக்கக்கூடிய ஓர் ஆபத்தான மூளை வீக்கமாகும்.
இது நிரந்தர மூளைக் காயம் உள்ளிட்ட கடுமையான நரம்பியல் விளைவுகளுக்கு வழி வகுக்கும்.
2024 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், இந்தியாவில் உள்ள சுமார் 24 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 1,548 ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.