நிர்பயா கூட்டு வண்புணர்வு மற்றும் கொலை வழக்கு விசாரணைக் குழுவின் தலைவரான இந்திய காவல் பணி அதிகாரி சாயா ஷர்மாவிற்கு 2019 ஆம் ஆண்டிற்கான துணிவு மற்றும் தலைமைத்துவத்திற்கான மெக்காயின் நிறுவன விருது வழங்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆட்கடத்தல்களுக்கு எதிரான முறைப்படுத்தப்பட்ட செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை தயாரிப்பதில் இவர் முக்கிய பங்காற்றினார்.
இந்த விருதானது மனித உரிமைகள், மனிதாபிமான இரக்கம், நீதி, சுதந்திரம் மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றிற்காக துணிச்சலாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
மலாலா யூசப்சாய் (2015) மற்றும் டிகம்பே முட்டோம்போ (2016) ஆகியோர் இவ்விருது பெற்ற மற்ற பிரபலங்களாவர்.