மேகாலயாவின் திட்டமிடல் துறையின் ஒரு முன்னெடுப்பான, “இணைய-முன்மொழிவு அமைப்பு” ஆனது, ஐக்கிய நாடுகள் விருதான 2022 ஆம் ஆண்டு தகவல் சங்கத்தின் உலக உச்சி மாநாடு (WSIS) மன்றப் பரிசுகளை வென்றுள்ளது.
"இணைய-முன்மொழிவு அமைப்பு" என்பது மேகாலயா தொழில் நிறுவனங்கள் கட்டமைப்புத் திட்டத்தின் (MeghEA) ஒரு பகுதியாக இருப்பதோடு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசாங்கத் துறைகளிலும் உள்ள கோப்புகளின் 75 சதவீத காகிதம் சார்ந்த வேலைகளை இது நீக்குகிறது.
பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் சக்தியைப் பயன்படுத்தி மாநில மக்களுக்கு வேண்டிய நிர்வாகத்தையும் சேவை வழங்கலையும் மேம்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.