இந்தியாவில் நீர் பாதுகாப்பை உறுதி செய்ய தனக்கென சொந்தமான நீர் கொள்கையைக் கொண்டுள்ள முதல் மாநிலமாக மேகாலயா ஆகியுள்ளது.
நீர்வளங்களைப் பொதுவான வளங்களாக அங்கீகரித்தல், வீட்டு உபயோகம் மற்றும் சுகாதாரப் பயன்பாட்டிற்கு மாநிலத்தின் குடிமக்கள் அனைவருக்கும் தூய்மையான மற்றும் பாதுகாப்பான நீரை வழங்குதல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை இந்தக் கொள்கையின் நோக்கங்களாகும்.
நீர் ஆதாரங்களின் அளவு மற்றும் தரம் குறைவதைத் தடுக்க அனைத்து நீர் ஆதாரங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.