ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலானது, மேகாலயாவிற்குப் பரவியுள்ளது. இங்கு அஸ்ஸாமைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் தொற்று நோய் பரவியதன் காரணமாக ஏறத்தாழ 17,000 பன்றிகள் இறந்துள்ளன.
இது வளர்ப்பு மற்றும் வனப் பன்றிகளைத் தாக்கும் ஒரு கொடிய மற்றும் தொற்றும் தன்மையுள்ள ஹெமொர்ஹஜிக் வைரஸ் நோயாகும்.
இந்த நோயானது முதன்முதலில் 1909 ஆம் ஆண்டில் கென்யாவில் கண்டறியப் பட்டது. அதன் பின்னர் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் இது கண்டறிய ப்பட்டது.
உலக விலங்குச் சுகாதார அமைப்பின் படி, இந்நோயானது ஆஸ்பாவிரிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை டிஎன்ஏ வைரஸினால் அதிக அளவில் ஏற்படுகின்றது.
இந்த வைரசானது உண்ணிகளின் மூலம் பரவுகின்றது. இது தொற்றுள்ள பன்றிகள், மலம் மற்றும் உடல் திரவங்கள் ஆகியவற்றுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படும் தொடர்பின் மூலம் பரவுகின்றது.