TNPSC Thervupettagam

மேட்டூரிலிருந்து நீர் திறப்பு

June 15 , 2020 1497 days 664 0
  • தமிழ்நாடு முதல்வரான எடப்பாடி கே பழனிசாமி குறுவை நீர்ப் பாசனப் பயன்பாட்டிற்காக மேட்டூர் அணையிலிருந்து டெல்டாப் பகுதிக்கு நீரினைத் திறந்து விட்டார்.
  • வழக்கமான ஜுன் 12 ஆம் தேதியன்று மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப் படுவது தற்பொழுது 17வது முறையாகும்.
  • மேட்டூர் அணை வரலாற்றில் 16 முறை (ஆண்டுகள்) மேட்டூர் அணையிலிருந்து வழக்கமான ஜுன் 12 ஆம் தேதியன்று நீர் திறக்கப்பட்டுள்ளன.
  • இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டில் (12 ஆண்டுகளுக்கு முன்பு) மேட்டூர் அணையிலிருந்து நீரானது வழக்கமான ஜுன் 12 அன்று திறந்து விடப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதியிலிருந்து தற்பொழுது வரை (2020 ஜுன் 12) இந்த அணையானது கடந்த 305 நாட்களாக 100 கன அடி நீரைக் கொண்டுள்ளது.
  • 2005-06 ஆம் ஆண்டில், 427 நாட்களாக மேட்டூர் அணையின் நீரின் அளவானது 100 கன அடிக்குக் கீழே செல்லவில்லை. 
  • இதன் மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16.05 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்கள் நீர்ப்பாசன வசதியைப் பெற இருக்கின்றன. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்