TNPSC Thervupettagam

மேம்பட்ட எந்திர மனித அறுவைச் சிகிச்சை மையம்

March 18 , 2022 858 days 519 0
  • ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பல்நோக்கு மருத்துவமனையில் ஒரு மேம்பட்ட எந்திர மனித அறுவைச் சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இரண்டு கட்டுப்பாட்டு நிலையங்கள் கொண்ட எந்திர இயக்க அமைப்புகளானது தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகம் மூலம் வாங்கப்பட்டது
  • தமிழ்நாடு அரசுப் பல்நோக்கு மருத்துவமனையில் நிறுவப்பட்ட டா வின்சி என்ற எந்திர மனித அறுவை சிகிச்சை முறையானது குறைந்தபட்ச வளர்ச்சியைப் பெற்று வரும் அறுவை சிகிச்சை முறையின் ஒரு மேம்பட்ட வடிவமாகும்.
  • இந்த எந்திர மனித அறுவைச் சிகிச்சையானது அறுவைச் சிகிச்சை நிபுணர்களுக்கு ரோபோ (எந்திர மனிதன்) கருவிகளைப் பயன்படுத்தி மிகச் சிக்கலான மிகப்பெரிய அறுவை சிகிச்சைகளை எளிதாகச் செய்ய உதவும்.
  • இந்த மையம் நாட்டில் அரசிற்கு சொந்தமாக அரசால் ஏற்படுத்தப்பட்ட முதல் மையம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்