TNPSC Thervupettagam

மேயர்களின் இராஜினாமா

July 6 , 2024 12 days 88 0
  • கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மேயர்கள் சமீபத்தில் தங்கள் மேயர் பதவியை ராஜினாமா செய்தனர்.
  • கோயம்புத்தூர் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை அதன் மாநகராட்சி ஆணையரிடம் சமர்ப்பித்தார்.
  • திருநெல்வேலி மேயர் P.M. சரவணன், தனது இராஜினாமா கடிதத்தினை அம்மாநகராட்சியின் ஆணையரிடம் சமர்ப்பித்தார்.
  • 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகர மாநகராட்சிக் கழக சட்டத்தின் 37வது பிரிவின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் மூலம் மேயரின் ராஜினாமாவினை அங்கீகரிக்க சிறப்பு சபைக் கூட்டம் நடத்தப்படும்.
  • மேயரின் இராஜினாமா ஆனது, கோயம்புத்தூரில் இரண்டாவது முறையாக தனது பதவிக் காலத்தின் நடுவில் ஒருவர் ராஜினாமா செய்ததைக் குறிக்கிறது.
  • முதன்முதலாக 2014 ஆம் ஆண்டு S.M. வேலுசாமி, மேயர் பதவியில் இருந்து விலகினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்