அருணா மில்லர், அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் துணை நிலை ஆளுநருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்திய-அமெரிக்க அரசியல்வாதி என்ற ஒரு வரலாற்றினைப் படைத்தார்.
ஆளுநருக்கு அடுத்தபடியாக மாகாணத்தின் மிக உயர்ந்த அதிகாரி துணை நிலை ஆளுநரே ஆவார்.
ஆளுநர் மறைந்தாலோ, ராஜினாமா செய்தாலோ அல்லது பதவியில் இருந்து நீக்கப் பட்டாலோ துணை நிலை ஆளுநரே ஆளுநராகப் பொறுப்பேற்பார்.