கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 7 வயது சிறுவனிடம் மேற்கு நைல் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இது சமீப காலத்தில் மலபார் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள ஏறக்குறைய ஒரு கண்டறிய முடியாத வகை வைரல் தொற்று ஆகும்.
மேற்கு நைல் காய்ச்சல் குலக்ஸ் கொசுக்களினால் பரப்பப் படுகின்றது.
இதன் அறிகுறிகளானது காய்ச்சல், தலைவலி, சோர்வு மற்றும் உடல் வலி, குமட்டல், வாந்தி, சில நேரங்களில் தோலில் அரிப்பு மற்றும் நிணநீர் சுரப்பிகள் வீக்கம் ஆகியவையாகும்.
உலக சுகாதார அமைப்பானது மேற்கு நைல் வைரஸ் என்பது பாதிக்கப்பட்ட கொசுக்கள் மனிதர்களை கடிப்பதன் மூலம் பரவுவதாக கூறியுள்ளது.
கொசுக்களானது நோயுற்ற பறவைகளை கடிக்கும் போது பாதிக்கப்படுகின்றன.