மேற்கு வங்காளத்தில் நான்கு புதிய பல்லுயிர்ப் பாரம்பரியத் தளங்களை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம், தற்போது மேற்கு வங்காளமானது நாட்டிலேயே அதிக அளவில் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளங்கள் உள்ள ஒரு மாநிலமாக உள்ளது.
அந்த நான்கு புதிய தளங்கள்
சார் பாலிடங்கா- நாடியா,
மாநில தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலைய வளாகம் - நாடியா,
டார்ஜிலிங்கில் உள்ள நாம்திங் போகர் மற்றும்
பிர்பூமில் உள்ள ஆம்கோய் புதைபடிவப் பூங்கா.
நாம்திங் போகரி என்பது இமயமலை சாலமண்டர் இனங்களின் தாயகமாகும்.
ஆம்கோய் புதைபடிவப் பூங்காவானது மேற்கு வங்காளத்தில் உள்ள முதல் மரங்களின் புதைபடிவப் பூங்கா ஆகும்.
மேற்கு வங்காளத்தில் தற்போதுள்ள அந்த நான்கு பல்லுயிர்ப் பாரம்பரியத் தளங்கள் : ஜார்கிராமில் உள்ள சில்கிகர் கனக் துர்கா, கூச் பெஹாரில் உள்ள பானேஸ்வர் ஷிவ் டிகி, டார்ஜீலிங்கில் உள்ள டோங்லு மற்றும் தோத்ரே ஆகியனவாகும்.