அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் குறைக்கடத்தி உற்பத்தியாளரான மைக்ரோன் டெக்னாலஜி நிறுவனம், அகமதாபாத்திற்கு அருகிலுள்ள சனாந்தில் அதிநவீன குறைக் கடத்தி அலகு ஒன்றை அமைக்க குஜராத் மாநில அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவின் நினைவகச் சில்லு தயாரிப்பில் தன்னிறைவை நோக்கிய பயணத்தில் இது ஒரு குறிப்பிடத் தக்க மைல்கல்லாக உள்ளது.
இது 5,000 நேரடி வேலைகளை உருவாக்கும் என்றும் இப்பணிகள் 18 மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.