நாட்டில் முதன் முறையாக யானைகளுக்கான மறுவாழ்வு மையத்தை கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா கிராமமான கோட்டூரில் அமைக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த மறுவாழ்வு மையமானது யானைகள் அருங்காட்சியகம், பாகன்களுக்கான பயிற்சி மையம், அனைத்து வசதிகளையும் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் யானைகள் தகன மையம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
இலங்கையில் உள்ள பின்னவாலா யானைகள் ஆதரவு மையத்தின் வரிசையில் இது திட்டமிடப்பட்டுள்ளது.