"அகதிகளை வரவேற்று ஏற்றுக் கொள்ளும் வகையிலான அவரது முயற்சிகளுக்காக", முன்னாள் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் யுனெஸ்கோ அமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான அமைதிப் பரிசினைப் பெற்றுள்ளார்.
2015 ஆம் ஆண்டின் கோடைக் காலத்தில், அகதிகள் ஐரோப்பாவிற்குள் வந்து கொண்டு இருந்த போது, மெர்க்கெல் தனது நாட்டின் எல்லைகளை அவர்களுக்காக திறக்க அனுமதித்து, ஜெர்மனிய நாட்டவரிடம் "நாம் இதைச் செய்ய முடியும்" என்று பொது மக்களிடம் அறிவித்தார்.
யுனெஸ்கோ அமைதிப் பரிசானது அதிகாரப்பூர்வமாக ஃபெலிக்ஸ் ஹௌபோவேட் போய்க்னி யுனெஸ்கோ அமைதிப் பரிசு என்று அழைக்கப்படுகிறது.
ஐவரி கோஸ்ட்டின் முன்னாள் அதிபரின் நினைவாக இதற்கு இப்பெயரானது சூட்டப் பட்டது.