யுனெஸ்கோ-இந்தியா-ஆப்பிரிக்கா ஹேக்கத்தான் என்ற நிகழ்வானது உத்தரப் பிரதேசத்தில் உள்ள கௌதம புத்தர் பல்கலைக் கழகத்தில் தொடங்கப் பட்டுள்ளது.
இது அந்த அமைப்பின் நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை எதிர் கொள்வதை நோக்கமாகக் கொண்டதோடு, கலாச்சார ஒருங்கிணைப்புக்கு ஒரு மையமாகவும் செயல்படுகிற வகையில் 36 மணிநேரம் நடைபெறும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
இது இந்தியா மற்றும் அதன் ஆப்பிரிக்கப் பங்குதார நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி சமூகத்தினரை ஒன்றிணைக்கிறது.