மரியா ரேசா என்பவர் 2021 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ/குயிலர்மோ கானோ உலகப் பத்திரிக்கைச் சுதந்திர விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யுனெஸ்கோவின் கூற்றுப்படி, 25,000 டாலர் மதிப்பிலான இந்த விருதானது “குறிப்பாக ஆபத்தானத் தருணங்களில் பத்திரிக்கைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் அதனை மேம்படுத்தவும் ஆற்றிய மகத்தானப் பங்களிப்பினை அங்கீகரிப்பதற்காக” வழங்கப் படுகிறது.
இந்த விருதிற்கு கொலம்பியப் பத்திரிக்கையாளரான குயிலர்மோ கானோ ஐசாசா (Guillermo Cano Isaza) என்பவரின் நினைவாக இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.