இளைஞர்களிடையே தொழில் முனைவை ஊக்குவிப்பதற்காக யுவஸ்ரீ திட்டம் II அல்லது யுவஸ்ரீ அர்பன் என்ற ஒரு புதிய திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் தனது சொந்த வணிக முன்னெடுப்புகளை அமைப்பதற்காக மாநில சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையிடமிருந்து ஐடிஐ அல்லது இதர தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பயின்று வெளியேறும் ஏறக்குறைய 5000 இளைஞர்கள் நிதியுதவி பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
யுவஸ்ரீ I என்ற திட்டமானது மேற்கு வங்க மாநிலத்தின் தொழிலாளர் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், வேலையில்லாத 1,00,000 இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வேலையில்லாப் படித் தொகையாக ரூ.1500 அளிக்கப்படும்.