TNPSC Thervupettagam

யூரியா உற்பத்தி

January 17 , 2020 1647 days 613 0
  • HURL (இந்துஸ்தான் ஊர்வாரக் & ரசாயன் லிமிடெட்) நிறுவனத்தின் வணிகப் பொருளான APNA UREA-SonaUgle ஆனது மத்திய இரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டி வி சதானந்த கவுடா அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது.
  • யூரியா உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்காக சிந்த்ரி, கோரக்பூர் மற்றும் பரௌனியில் அமைந்துள்ள மூன்று யூரியா ஆலைகளைப் புதுப்பிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தால்ச்சர் மற்றும் ராமகுண்டத்தில் உள்ள மற்ற இரண்டு பெரிய உர ஆலைகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
  • யூரியாவின் ஆண்டு உற்பத்தியை ஆண்டுக்கு 63.5 லட்சம் மெட்ரிக் டன் என்னும் அளவிற்கு அதிகரிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • இந்திய எண்ணெய் கழகம், தேசிய அனல் மின் நிறுவனம் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக HURL நிறுவனம் உள்ளது.
  • யூரியா உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறச் செய்வதே HURL நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.
  • 2015 ஆம் ஆண்டு தேசிய யூரியா கொள்கையின் படி, இந்தியா முழுவதும் 31 யூரியா உற்பத்தி ஆலைகள் உள்ளன.
  • இவற்றில், 28 யூரியா உற்பத்தி ஆலைகளில் இயற்கை எரிவாயு எரிபொருளாக உள்ளது.
  • மீதமுள்ள யூரியா ஆலைகள் நாப்தாவை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்