சமீபத்தில் இந்திய விமானப்படை ரன்விஜய் என்ற ஒரு விமானப்படைப் பயிற்சியைக் கர்நாடாகாவின் UB மலைப்பகுதியில் நடத்தியது.
இது Su-30s போன்ற பல்வேறு போர் விமானங்களை உள்ளடக்கிய, பகல் மற்றும் இரவு நடவடிக்கைகளின் மூலம் போர் விமானிகளின் பல்வேறுத் திறன்களை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜூன் மாதம் 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி கர்நாடாகாவின் யுபி ஹில்ஸ் மற்றும் மத்திய விமானப் படை பகுதியில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சியானது விமானிகள் தங்கள் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், பல்வேறு சிக்கலான தந்திரங்கள்/சூழ்நிலையின் போது அவர்களின் செயல்படுத்தும் திறமையை வலுப்படுத்தவும் வாய்ப்பளித்து உள்ளது.