TNPSC Thervupettagam

ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்

August 7 , 2021 1079 days 483 0
  • ஒலிம்பிக் இறுதிப் போட்டியின் ஆடவருக்கான 57 கிலோகிராம் ஃப்ரீஸ்டைல் பிரிவில் ரஷ்ய ஒலிம்பிக் குழுவின் சவூர் உகுவேயிடம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்குக் கிடைத்துள்ள 5வது பதக்கமாகும்.
  • மேலும் இது இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்குக் கிடைத்துள்ள  2வது வெள்ளிப் பதக்கம் ஆகும்.
  • K.D. ஜாதவ், சுசில் குமார், யோகேஷ்வர் தத் மற்றும் சாக்சி மாலிக் ஆகியோரையடுத்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 5வது இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்