TNPSC Thervupettagam

ரவீஷ் குமார்: வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புதிய செய்தித் தொடர்பாளர்

July 22 , 2017 2553 days 970 0
  • கோபால் பக்லேவிற்கு பதிலாக, வெளியுறவுத் துறை அமைச்சகம், ரவீஷ் குமாரை புதிய செய்தித் தொடர்பாளராக நியமித்துள்ளது.
  • வெளியுறவுத் துறையின் செய்தித் தெரடர்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ஜெர்மனியின் பிராங்ஃபர்டிட்கான இந்தியாவின் தூதராக இருந்தவர் ரவீஷ் குமார்.
ரவீஷ் குமார் பற்றி
  • 1971 இல் பிறந்தவர், ரவீஷ் குமார். மதுரா சாலையில் உள்ள தில்லி பப்ளிக் பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். தில்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்
  • 2013 ஆம் ஆண்டு முதல் பிராங்ஃபர்டில் தூதராக பணியாற்றிய குமார், இந்தோனேசியாவின் அதிகாரப்பூர்வ மொழியான பகாசாவில் (Bahasa) புலமைப் பெற்றவர்.
  • இவர் இந்திய வெளியுறவுப்          பணியில் 1995        இல்    இணைந்தார் மற்றும் ஜகார்த்தாவில் இந்திய தூதரகத்தில் தனது பணியைத் தொடங்கினார். இதைத் தெரடர்ந்து, லண்டன் மற்றும் திம்புவில் அவர் பணியமர்த்தப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்