தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிக்கையாளரான D. ராபர்ட் கோவென்டர், ஐக்கிய இராஜ்ஜியத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான V.K. கிருஷ்ண மேனன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
காலனிய எதிர்ப்பு பத்திரிக்கைத் துறையின் முன்னோடியாக இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இவர் இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ராபர்ட் கோவென்டர் 1930 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார்.
தென் ஆப்பிரிக்காவில் “வெள்ளையர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விளையாட்டு அணிகளின்” புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்த முதல் பத்திரிக்கையாளர் இவராவார்.
V.K. கிருஷ்ண மேனன்
பிரிட்டனுக்கான இந்தியாவின் முதலாவது உயர் ஆணையர் K. கிருஷ்ண மேனன் ஆவார்.
இவர் 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 1962 ஆம் ஆண்டு அக்டோபர் வரை இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றினார்.
இவர் ஐ.நா. பாதுகாப்பு ஆணையத்தில் (UNSC - UN Security Council) மிக நீண்ட நேரம் (8 மணி நேரங்கள்) உரையாற்றிச் சாதனை படைத்தார்.
இவர் 1957 ஆம் ஆண்டில் தனது UNSC உரையில் காஷ்மீர் மீதான இந்தியாவின் இறையாண்மை குறித்து விவாதித்தார்.