ராமானுஜரின் பிறந்த தினமானது ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி என்றும் அழைக்கப் படுகின்றது.
இது தமிழ் சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகின்றது.
இது சித்திரை மாதத்தின் திருவாதிரை நட்சத்திரத் தினத்தன்று நிகழ்கின்றது. இது 2019-ஆம் ஆண்டு மே 9 அன்று நிகழ்கின்றது.
இவரது சமயம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் ஆகியவை பின்வரும் முக்கியமான 2 வைணவ மையங்களில் பரப்பப் படுகின்றன.
திருச்சியின் ஸ்ரீரங்கத்தில் உள்ள திருவரங்கநாதர் ஆலயம்
ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் உள்ள வெங்கடேஷ்வரர் ஆலயம்
வைணவத் தத்துவ ஞானியான இராமானுஜர் ஒரு புரட்சிகர சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
இவர் பாலினம், தேசியவாதம், சாதி, மதம், இனம், சமூகம், கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப் படாமல் ஒவ்வொரு மனிதரும் சமம் என்ற தனது கொள்கையை ஊக்குவித்தார்.
விஷிஷ்ட அத்வைதா தத்துவத்தின் சிறந்த ஆதரவாளராக ஸ்ரீ ராமானுஜர் விளங்குகின்றார்.