மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தேசிய நவீனக் கலை கூடமானது “ராம்கின்கர் பாய்ஜ், அமைதியான மாற்றம் மற்றும் வெளிப்பாடுகளின் (உணர்ச்சிகளின்) மூலம் பயணம்” என்ற தலைப்பு கொண்ட ஒரு மெய்நிகர் சுற்றுலாவை நடத்தியுள்ளது.
இது 2020 ஆம் ஆண்டு மே 26 அன்று ராம்கின்கார் பாய்ஜ் அவர்களின் 115வது பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக நடத்தப்பட்டது.
ராம்கின்கர் பாய்ஜ், (1906 – 1980) என்பவர் புகழ்பெற்ற சிற்பக் கலை வல்லுநர், ஓவியர் மற்றும் வரைபட விளக்கக் கலைஞர் ஆவார்.
இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள பான்கூராவில் பிறந்தார்.
நந்தலால் போஸ் மற்றும் பெனோடேபெஹரி முகர்ஜி ஆகியோருடன் இணைந்து இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு நவீனக் கலைக்கான முக்கிய மையங்களில் ஒன்றான சாந்தி நிகேதனை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.