ஒடிசாவைச் சேர்ந்த டோங்ரியா கோன்ட் இனத்தவரால் வடிவமைக்கப்பட்டு, கையால் நெய்யப்படும் ராயகடா சால்வைகள் புவிசார் குறியீட்டினைப் பெற உள்ளன.
இது பாரம்பரிய கைவினைத் திறனின் தலைசிறந்தப் படைப்பாகக் கருதப்படுகிறது.
இந்தப் பழங்குடியினர், சித்திரத் தையல் (பூத்தையல்) வேலைப்பாடுகள் கொண்ட இந்தச் சால்வைகளை நன்றியுணர்வின் அடையாளமாக விருந்தினர்களுக்குப் பரிசாக வழங்குகின்றனர்.
டோங்ரியா கோண்ட் இனத்தவர் ராயகடா மாவட்டத்தின் எளிதில் பாதிக்கப் படக் கூடிய பழங்குடியினர் குழுவினர் (PVTG) ஆவர்.
இந்த மாநிலத்தைச் சேர்ந்த கோராபுட் காலா ஜீரா அரிசிக்கும் மதிப்புமிக்க புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரிசி வகையானது பெரும்பாலும் 'அரிசி வகைகளின் இளவரசன்' என்று குறிப்பிடப் படுகிறது.