உலகப் புகழ்பெற்ற கென்ய அரசியல்வாதி, இயற்கைப் பாதுகாப்பாளர் மற்றும் புதை படிவச் சேகரிப்பாளரான ரிச்சர்ட் லீக்கி காலமானார்.
ஆப்பிரிக்காவில் தான் மனிதகுலம் உருவானது என்பதை நிரூபிக்கும் பல அற்புதமான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்த 1984 ஆம் ஆண்டின் ‘துர்கானா பாய்’ என்ற கண்டுபிடிப்பின் புகழ் இவரையேச் சாரும்.
‘துர்கானா பாய்’ என்பது இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட மனித மூதாதையர்களின் எலும்புகளில் மிகவும் முழுமையாகக் கிடைக்கப் பெற்ற ஒரு புதைபடிம எலும்புக் கூடாகும்.
மேலும் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கையைக் காப்பாற்றுவதற்காக, தந்த வர்த்தகங்களுக்கு எதிரான பல பிரச்சாரங்களை முன்னெடுத்து நடத்தியதற்காகவும் வேண்டி லீக்கி பிரபலமாக அறியப்படுகிறார்.