மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி சக்தி ஆலையானது கடுமையான மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவினால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தூய்மைத் தொழில்நுட்ப நிதியத்திலிருந்து (CTF - Clean Technology Fund) நிதியைப் பெறும் முதலாவது திட்டம் இதுவாகும்.
மேலும் உலக வங்கியிடமிருந்து நிதியைப் பெறும் இந்தியாவின் முதலாவது சூரிய ஒளிப் பூங்கா இதுவாகும்.
இந்தத் திட்டம் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 750 மெகா வாட் திறனுடன் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.