TNPSC Thervupettagam

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு

July 2 , 2024 16 days 197 0
  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 உலகக் கோப்பைப் போட்டியில் பெற்ற வெற்றி தான் இந்த வடிவப் போட்டியில் தங்களது கடைசி வெற்றி என்று இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவர் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் அறிவித்துள்ளனர்.
  • கபில்தேவ் (1983) மற்றும் M.S. தோனி (2007 மற்றும் 2011) ஆகியோருக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்ற மூன்றாவது இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவர் என்றதொரு பெருமையை ரோஹித் பெற்றுள்ளார்.
  • 50 T20 போட்டிகளில் அணித் தலைவராகப் பங்காற்றிய முதல் அணித் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டி அவர் பெற்ற 50வது வெற்றியாகும்.
  • அவர் ஐந்து T20I சதங்களையும் அடித்துள்ளார் என்ற வகையில் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு இணையான வகையில் இந்த வடிவப் போட்டியில் அதிக சதம் அடித்துள்ளார்.
  • கோஹ்லி தனது வாழ்க்கையில் 125 T20I போட்டிகளில் விளையாடி, சராசரியாக 48.69 மற்றும் 137.04 ஸ்ட்ரைக் வீதத்தில் (ஒரு ஓவருக்கு குறிப்பிட்ட ரன்களை எடுத்தல்) 4188 ரன்கள் எடுத்துள்ளார்.
  • அவர் இந்த வடிவப் போட்டியில் இரண்டாவது அதிக ரன்களை எடுத்துள்ளார்.
  • T20 உலகக் கோப்பைப் போட்டிகளில் ரன் குவித்தவர்களின் தரவரிசையில் முன்னணி இடத்தினைப் பெற்றதுடன் அவர் தனது பங்கேற்பினை நிறைவு செய்து கொண்டார்.
  • இரண்டு வெவ்வேறு T20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த ஒரே வீரர் இவரே ஆவார்.
  • 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளின் சிறந்த ICC ஆடவர் T20I அணியிலும் ஒருவராக அவர் இடம் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்