அஹோம் படைப்பிரிவின் படைத் தளபதி லச்சித் பர்புகானின் 400வது பிறந்தநாளின் 3 நாட்கள் அளவிலான கொண்டாட்டம் புது டெல்லியில் தொடங்கியது.
அஹோம் வம்சத்தினர் மற்றும் லச்சித் பர்புகான் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்தக் கண்காட்சியும் நடைபெற்றது.
பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் புவியியலையும், அதன் அருகிலுள்ள மலைகளையும் பற்றி நன்கு அறிந்த அவர் ஒரு சிறந்த இராணுவத் தலைவர் ஆவார்.
மன்னர் சரத்வாஜ் சிங்கா தலைமையிலான அஹோம் இராச்சியத்தின் ஐந்து போர்புகன்களில் ஒருவராக அவருக்கு நிர்வாக, நீதித்துறை மற்றும் இராணுவப் பொறுப்புகள் வழங்கப்பட்டன.
1671 ஆம் ஆண்டு சராய்காட் போரில் அவர் மேற்கொண்ட தொலைநோக்கு மிக்க மற்றும் சிறந்தத் தலைமைக்காக அவர் பெருமளவில் நினைவு கூரப்படுகிறார்.